Sunday, September 27, 2009
ஏமாற்றங்களின் நெடும் பயணம்...
தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..
விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்
வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?
எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment