Sunday, September 27, 2009
குமுறி வெடிக்கும் இதயம்...
குமுறி வெடிக்கும் இதயம்
சாவை நோக்கிஅழைக்கிறது
நெருப்பு நீரில் குளித்தெழும்ப
மனம் என்னை இழுக்கிறது
நினைத்துக்கூடப் பார்க்கவில்லை
நிம்மதி தந்தவள்
நிறுத்திவிடுவால் என்று
காற்று நின்று இதயம் அடித்து
கண்கள் மூடும்வேளை
கானல் நீராய்ப்போன வாழ்க்கை
குறுகிப்போய்விடும் என் உடல் கருகிப்போய்விடும்
உடல் எரியும் சாம்பல் மேட்டில்
ஊளை இட்டு நாய் வாலை ஆட்டும்
காதல் நிலைத்தது எனக்காட்ட
காலால் கிளறும் என் இதயத்தை
ஆப்பொழுது தெரியும்
நாய்க்குத்தெரிந்தது
எனக்குத்தெரியவில்லையே என்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment