
என் வாழ்வின் சந்தோசம்
என் காதல் என்றிருந்தேன்
உன் அழகை ரசித்தேன் - அதைவிட
உன் உள்மனதை புரிந்து கொண்டேன்
நீயோ! என்னை ஸ்பரிசத்துக்காக
ஏங்குபவன் என்றாய்
உன் வார்த்தை வலியை விட
என்னை காதல் வலி கொல்கிறது
ஞாபகங்கள் துரத்துகின்றன
தவிர்க்க முடியவில்லை
இன்றும் கானல் நீராய்,
என்னுள் என்னை ஏமாற்றுகின்றாய்
நித்திரை இன்றி, கனவுகள்
தொலைந்த இடம் தெரியவில்லை
உணவு இன்றி, பசி
தொலைந்த இடமும் தெரியவில்லை
மாரி மழை பொழிந்தாலும் - என்னை
சோக மழை நனைக்கிறது – ஆனால்
உன் எண்ணங்களை கரைக்காது
காப்பதற்கு என் நெஞ்சில் திடம் இருக்கிறது…


No comments:
Post a Comment