Saturday, March 1, 2014

இயற்கையின் ரசிகன் நான்...

வானத்தை ரசிக்காத நாளே இல்லை
வானம் ஒரு நகரம் போல எனக்கு தோன்றும்
விண்மீன்கள் பார்த்தவுடன் என் காதலி கூந்தலில்
ஆபரணமாக சூட்ட நினைப்பேன்

வானில் தெரிந்த நகரம் பெரும் சனத்தொகை
கொண்ட ஒளிமயமான ஒரு நாடு போலவும்
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு விளக்கு
எறிவது போல எனக்கு தோன்றும்

ஆனால் அது அமைதியான நகரம்
ஒருவர் கூட ஒரு சப்தமும் எழுப்பவில்லை
நான் தான் பெரியவன் நான் செய்வதுதான் சரி
என்ற குரல்களே வரவில்லை
நாங்கள் தவறு செய்யவில்லை எல்லாம்
தற்செயலாகத்தான் நடந்தது என்று யாரும்
சாக்குபோக்கும் சொல்லவில்லை

தனக்கு மேலிருப்பது தன் சாதனைகளை
தம்பட்டம் அடித்துக் கொள்ளாத நாடு

நான் இப்பிடி வானத்தை ரசித்து கொண்டு இருப்பேன்
வானத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்...

No comments:

Post a Comment

PAKEE Creation