Saturday, March 1, 2014

எது அழகு எது அழிவு...

கண்ணுக்கு மிக அழகாகத் தெரியும்
நல்ல பாம்பிடமும் தான் மனிதன்
உயிரை குடிக்கும் சிறந்த விஷம் இருக்குறது

நாக்குக்கு ருசிக்கும் இனிப்பில்தான்
மனித சக்தியை உறிஞ்சி நாசம் செய்யும்
கடுமையான வியாதிகள் மறைத்து கிடக்கின்றன

அழகிய நெருப்பு ஜுவாலைதான்
எதையும் பொசுக்கி அழித்து விடும்
சக்தி இருக்கிறது

அழகிய கடலலைகள் தான்
உலகத்தின் மாபெரும் நகரங்களை அழித்து
பசுஞ் சோலைகளை பாலைவனக் காடுகளாக்கி விடுகின்றன

இப்பிடி விகாரத்திலிருந்து அழகையும்
அதிலிருந்து விகாரத்தையும்
அழிவிலிருந்து ஆக்கத்தையும்
ஆக்கத்திலிருந்து அழிவையும்
இயற்கையும் விளைவிப்பதால்

எது அழகு எது விகாரம்
எது ஆக்கம் எது அழிவு என்பதை
மனிதன் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
புரிந்து கொள்ள முடியாத பெரும் பிரமையிலேயே
கால வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation