Thursday, May 8, 2014

பெண்ணின் உணர்ச்சி...

பெண் உள்ளமே ஓர் அலாதி
ஆண் பிள்ளைகள் தங்கள் அங்க லாவண்யங்களைப்
பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயம் உண்டு
ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு
பார்த்து விட்டால் வெளியில் கோபம் உண்டு
பார்த்து மலைப்பது கண்டு உள்ளே மகிழ்ச்சி உண்டு
நாணமுண்டு அந்த நாணத்தை உடைக்க
ஆண்மகன் வரமாட்டானாவென்ற ஏக்கமும் உண்டு
இத்தைய பயம் , ஆசை , கோபம் , நாணம் , ஏக்கம் ஆகிய
வேறுபட்ட உணர்ச்சிகளின் அலை மோதல்தான் காதலின்பம்
அந்த இன்பத்திற்கு வசப்படாத பெண்
உலகத்தில் என்றும் பிறந்ததில்லை
இனிப் பிறக்கப்போவதுமில்லை
உணர்சிகள் எல்லோருக்கும் சமம்
இந்த உணர்ச்சிகளை அந்தஸ்தோ , சாதியோ , சமயமோ
எதுவுமே கட்டுப்படுத்த முடியாது
அந்தஸ்தும் சமயமும் சாதியும் கடலையும் காற்றையும்
கட்டுப்படுத்த முடியமா?
இயற்கையின் இந்தச் சக்திகளைப் போலத்தான் உணர்ச்சிகளும்
இயற்கைகளைக் கட்டுப் படுத்த முடிவதே இல்லை...

No comments:

Post a Comment

PAKEE Creation