Thursday, May 8, 2014

பெண்ணின் அழகு..

அடக்கமுள்ள பெண்களுக்கு இருக்கும் அழகு
அடக்கமில்லாத பெண்களுக்கு இருப்பதில்லை

தலைகுனிந்த பெண்ணிடம் இருக்கும் அழகு
தலைகுனியாமல் நிமிந்து நடக்கும்
தருணிகளிடம் கிடையாது

அச்சப்பட்டும் வெட்கப்பட்டும் கூனிக்குறுகும்
குமரிகளிடமுள்ள அழகு
உணர்ச்சிகளைக் கைவிட்டு உலாவும்
காரிகைகளிடம் கிடையாது

சுதந்திரத்தை ஆடவனிடம் பறிகொடுத்து அடங்கி
அவனிடம் வாழும் பெண்ணின் அழகு தெய்வீகமானது
அந்த அடக்கத்தில் சுதந்திரத்தை இழப்பதில்
மகத்தான சக்தி பெண்களுக்கு ஏற்படுகிறது

இயற்கை பெண்களை படைக்கும் போது
சில அம்சங்களை இயற்கையாகவே
படைத்தது விடுகிறது அதில்
அச்சம் , நாணம் , மடம் , பயிர்ப்பு
பெண்களுக்கே என்றும் உரித்தானவை
இந்த நான்கு அம்சங்களால் தான்
பெண் கடைக்கண் பார்வைக்குகூட
ஆண் அடங்கி விடுகிறான்...

No comments:

Post a Comment

PAKEE Creation