Thursday, May 8, 2014

காதலில் மட்டும் தான் உயிர் மயிர் போல தெரிகிறது...


உயிர்மேல் ஆசையில்லாதவன்
உலகத்தில் யாருமே கிடையாது
கூன் , குருடு , நொண்டி , முடவன் , பிறர் காணச் சகிக்காத ரோகமுடையவன்
தள்ளாடும் கிழவன் ஆகியவர்கள் கூட
உலகில் தத்தித் திரிந்தாவது ஜீவிக்க
இஷ்டப்படுகிறார்களே யொழிய
உயிர்விட யாருக்கும் மனம் வருவதில்லை
இந்தப் உயிர்ப் பயமும் அதனால் உயிர்மீது ஏற்படும்
தீவிரப் பற்றுதலும் மனித சமுதாயத்துக்கு மட்டுமல்ல
எப்படியாவது பிழைத்திருக்க வேண்டுமென்ற முயற்சியால் தான்

செடி கொடிகள் கூடத் தங்கள் வேர்களை நிலத்தின் ஆழத்துக்கு அனுப்பி
நீர் நிலைகளை ஆராய்ந்து உணவை உறிஞ்சுகின்றன
வேங்கையும் சிங்கமும் மனிதர்களை நோக்கிப் பாய்ந்து கொள்ள முயல்வதும்
உயிரை எப்பிடியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான்
உயிர் அகன்றால் உலகம் இருண்டு போகிறது

ஆனால் இந்த காதலில் மட்டும் தான்
உயிர் மயிர் போல தெரிகிறது
எவ்வளவோ பாசங்களை கடந்து வாரோம்
அந்த இழப்பு பெரிதாக தோன்றுவது இல்லை
ஆனால் காதலி இல்லை என்றதாகி விட்டால்
உடம்புக்கு உயிர் சுமை போல தோற்றமளிக்கிறது...

காதல் பண்ணுங்க காதல் மேல உயிரை வைக்காதிங்க
நம்பிக்கை தைரியம் வைத்து காதல் பண்ணுங்க
உங்க காதலுக்கும் ஜெயம் தான்...

No comments:

Post a Comment

PAKEE Creation