
நான் எங்கு
சென்றாலும்
நீயே என்னுடன்
வருகிறாய்
உன்
நினைவுகளால்.


சாப்பிடுமுன் சிந்தித்தால் நோயில்லை
சமைக்கு முன் சிந்தித்தால் கோபமில்லை
கல்விகற்குமுன் சிந்தித்தால் வேலைக்கு கவலையில்லை
தொழிலைத் தொடங்குமுன் சிந்தித்தால் நஷ்டமில்லை
கோபப்படுமுன் சிந்தித்தால் கஷ்டமில்லை
வயதான பின் சிந்தித்தால் லாபமில்லை
வருவதற்கு முன் சிந்தித்தால் துயரமில்லை
கடவுளைப்பற்றி சிந்தித்தால் என்றும் துன்பமில்லை...

நாணயத்தை
தடவிப்பார்த்து மதிப்பிடும்
கண்ணில்லாக் கிழவி போல்
உன் மனம் தடவி
அறிந்து கொண்டேன்
நீ சொல்லாத காதலை..
சாளரத்தின் வழியே
உடல் நனைக்கும் மழைத்தூறலாய்
என் மனதை நனைத்தது
காதலுக்கு நம் பெற்றோரிடம்
சம்மதம் கிடைத்த தருணங்கள்..
பூட்டிய கதவை
இழுத்து சரிபார்ப்பதாய்
ஒவ்வொரு முறையும்
என்னிடம் செல்லச் சண்டையிட்டு
உறுதி செய்து கொள்கிறாய்
உன் மீதான என் காதலை..


காதல்வயப்பட்டவர்கள்
அனைவரும் சொல்லுகிறார்கள்
தான் காதலில் வீழ்ந்துவிட்டதாக
எப்போது வீழ்ந்தாலும் என்னை
மீட்டெடுப்பது காதல் பின்னெப்படி
சொல்லுவது நான் வீழ்ந்தேனென்று
வேண்டுமானால் காதலில் மீள்’தேன்னென்று
சொல்லிக்கொள்கிறேன்
காதலேன்னை சாய்த்துவிடுவதுதில்லை
மாறாக நான் துவண்டுவிடும்போதெல்லாம்
உன் மார்பில் சாய்த்து கொள்கிறது
நம் காதல் ஆறுதலாக
காதல் ஒரு சுறுக்குகயுறு என்கிறார்கள்
எனக்கு காதல் கொடிக்கம்பத்தில்
கட்டப்பட்டகயறு என்னை
எப்போதுமே உச்சியில் பறக்கவிடுகிறது
காதலித்தால் காதல்தவிரபிற
இயக்கம் மறந்துபோகுமேன்பார்கள்
என் வாழ்க்கை சக்கரம் சுழலுவதே
காதல் தரும் என்னையால்தான்
காதல் பார்த்து பாழாய்போனவர்
காதலில் வீழ்ந்து வீனாய்போனவர்
பலர்வுண்டு
காதலே காதலிக்கும் காதல்
நம்முடையாது
எல்லோரும் காதல் பிரிந்துவிட்டதென்று
என்றாவது ஒருநாள் சொல்லுகிறார்கள்
நாம் எப்படி சொல்லிகொள்ளுவது
ஒவொரு நாளும் இறுக்கமாக
பிணைத்துவைக்கிறது என்பதைதவிர
எல்லோருக்கும் எல்லாவயதினர்க்கும்
காதல் ” வந்து ” ” போகும் ” மென்பார்கள்
நமக்கு மட்டும் காதல்
நம்முடனே இருந்துவிடுகிறது ஒவொருநாளும்...

நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது
நீ சிரிக்கும் போதெல்லாம்
எனக்கு சந்தேகம்
உன் பற்கள் எல்லாம் மணியாக
இருக்குமோவென்று
காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை
நீ நடனம் ஆடுகிராய ?..
நடக்கிறாயா ?..
உன்னை பொறுத்தமட்டில்
என் வரையில் இரண்டுமே
ஒன்றுதான்
நீ என்ன வாசனைதிரவிய
தொழிற்சாலையா ?..
உன்னை கடக்கும் காற்றில்
வீசும் வாசத்தை வைத்துசொல்கிறேன்...

நான் உன்னை போ போ
என்று சொல்லுவது
நீ என்னைவிட்டு போகவேண்டும்
என்பதற்க்காக அல்ல
என் இதயத்தினுள் போ போ
என்பதற்க்காக
என்னை மறக்க சொல்லுவது
ஒரே அடியாக மறந்துவிடுவதற்கு
அல்ல மறுபடியும் என்னை
நினைக்க செய்வதற்காக
உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்
உன்னை பார்க்காமலிருப்பது
தவிர்க்க வேண்டும் என்பதற்கல்ல
எப்போதும் உன் நினைவாலே
தவித்துகிடக்க வேண்டும் என்பதற்குத்தான்
கடைசியாக ஒன்று
என்னை காதலிக்கவேண்டம்
எண சொல்லுவது எதற்குதெரியுமா
உனக்கும் சேர்த்து நானே
காதலித்து கொள்கிறேன் என்பதற்க்காகதான்...

