Friday, July 17, 2009

நீ பார்க்கும்


நீ பார்க்கும் போதெல்லாம்
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு

நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது

நீ சிரிக்கும் போதெல்லாம்
எனக்கு சந்தேகம்
உன் பற்கள் எல்லாம் மணியாக
இருக்குமோவென்று

காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை

நீ நடனம் ஆடுகிராய ?..
நடக்கிறாயா ?..
உன்னை பொறுத்தமட்டில்
என் வரையில் இரண்டுமே
ஒன்றுதான்

நீ என்ன வாசனைதிரவிய
தொழிற்சாலையா ?..
உன்னை கடக்கும் காற்றில்
வீசும் வாசத்தை வைத்துசொல்கிறேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation