Friday, July 17, 2009

காதல் பூக்கள்...


கள்ளமில்லா உன் பார்வையால்
என்னைக் கொள்ளை கொண்டு
சென்று விட்டாய்
திசை மறந்த
பறவையாய்
திகைக்கிறோம்
நானும் என் காதலும்..


நாணயத்தை
தடவிப்பார்த்து மதிப்பிடும்
கண்ணில்லாக் கிழவி போல்
உன் மனம் தடவி
அறிந்து கொண்டேன்
நீ சொல்லாத காதலை..

சாளரத்தின் வழியே
உடல் நனைக்கும் மழைத்தூறலாய்
என் மனதை நனைத்தது
காதலுக்கு நம் பெற்றோரிடம்
சம்மதம் கிடைத்த தருணங்கள்..


பூட்டிய கதவை
இழுத்து சரிபார்ப்பதாய்
ஒவ்வொரு முறையும்
என்னிடம் செல்லச் சண்டையிட்டு
உறுதி செய்து கொள்கிறாய்
உன் மீதான என் காதலை..

செடி முழுக்க பூத்திருக்கும்
ரோஜாவாய்
நம் மனத்தோட்டத்தில்
மலர்ந்திருக்கின்றன‌

என்றும் வாடாத காதல் பூக்கள்...

No comments:

Post a Comment

PAKEE Creation