Saturday, March 1, 2014

‪நான் மட்டும் எப்பிடி தப்புவேன்...

மனித சித்தம் எத்தனை எத்தனை
பிரமைகளையோ உருவாக்கிறது
காலத்தின் வேகத்தைப்பற்றி நிர்ணயமும்
அந்தப் பிரமைகளில் ஒன்று.

காலம் ஒரே சீராகத்தான் ஓடுகிறது
இத்தனை மாத்திரைகள் கொண்டது ஒரு நாழிகை
இத்தனை நாழிகை கொண்டது ஒரு நாள் என்று
சூரியன் உதித்து மறைந்து மீண்டும் உதிக்கும் வரையில்
உள்ள நேரம் ஒரே ஒழுங்காகத்தான் அமைத்திருக்கிறது

நேரம் வேகமாகவும் ஓடுவதில்லை
அடியோடு ஆமை நடையும் போடுவதில்லை
ஆனால் மனித சித்தம் இந்த இயற்கை நிலையையும்
பல சமயங்களில் மாற்றி விடுகிறது
சிந்தனையில் சுழலும் எண்ணங்களுக்குதக்க படி
நேரம் வேகமாக ஓடுவது போலவும்
ஆமை வேகத்தில் நகருவது போலவும்
பிரமை மனிதனுக்கு உண்டாகிறது
சிந்தித்தால் ஏற்படும் மகிழ்ச்சி , வேதனை , கவலை 
ஆகிய உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடி
காலமும் வேகமாகவோ , மெதுவாகவோ
நகருவதாக நினைக்கிறோம்
வெறும் பிரமைதான்
இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து
தப்பியவர் யாருமே இல்லை...

4 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கு நன்றி அண்ணா
      என்னோட தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி

      Delete
  2. இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து
    தப்பியவர் யாருமே இல்லை...//நிஜம் தான்!

    ReplyDelete

PAKEE Creation