
தன்
உடம்பின் பாரத்தை
விடக் கூடிய பாரத்தைச்
சுமக்குமாம்
எறும்பு.
கையளவஇதயத்துள்
உன்னைச் சுமக்கிறேனே நான்.


பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.
ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.
கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?
சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?




நீ வந்த போதும்
என் இதயத்தில் நுழைந்த போதும்
தடுக்க நினைக்கவில்லை காதலை
நீ போகின்ற போதும்
இதயம் வேகுகின்ற போதும்
என்னால் அடக்க முடியவில்லை
சோகத்தை
வார்த்தைகள் கொடுக்கும் வலியை உன்னால் உன்னால் என் இதயம் துடிப்பது உனக்காக, என் இதயம் இருப்பது உன்னிடம், நான் கண்ணீர் சிந்துவது உன்னால், என்னை இழக்கப் போகிறேன் நீயாக வந்தாய் நான் வாழ்வது சந்தேகமடி உயிரே மனசு மட்டும் உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது என்னவளே ஏன் எங்கிருந்தாலும் உள்ளம் ஊமையாய் உறக்கம் மறந்து போனதே பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில், சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும் முன்பு, மழையில் நான் நனையவில்லை, நேசிக்கும் முன் யோசி வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல… அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு உன் என் கண்ணீர் காய்வதேயில்லை! பார்வை விட்டு
அறிந்து கொண்டேன்..!
நீ நம் காதலை
மறந்துவிடச் சொன்ன போது..!!
நீ சொன்னது கூட
எனக்கு வருத்தமில்லை...
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கே கழற்றி வைத்தாய்
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!
உன்னால்
சந்தோஷங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
உன்னால்
துக்கங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
சுகங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
வலிகள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
உன்னால்
காதல் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
உன்னால்
பிரிவு என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி,
அதை நீ ஏன் உனர மறுத்தாய்...?
அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..?
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!
வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!
உன்னை இழக்க முடியாமல்..!
நான் நீயாக மறினேன்
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று - உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..?
பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்....
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும்
சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்த என் தோழியே….
இன்று,
வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசனை ஏனோ…..
ஈரம் காய்ந்து போவதற்கு…..
மணலில் நான் விழவில்லை,
உதறி விட்டு நடப்பதற்கு…..
களவையும் கற்று மற என்றனர்….
காதலை கற்றேன், மறப்பதெப்படி?
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்
நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு….. காதல்.
என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே!
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்!
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

நீதான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..
நம் காதலை..
மறுபடியும் ஏன்
வருகிறாய்? என்
நினைவுக்குள்.
மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம்
காதல் நினைவுகளையும்
மறந்துவிட
அது என்ன நினைவுகளா?
இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.
நானும் உன்னை
மறந்திடலாம்
என்றென்னி இறைவனிடம்
வேண்டி நின்றேன்
அவனும் என்னை மறுத்துவிட்டான்




