Sunday, December 6, 2020

விடைகளோடு பிறந்திட வேண்டும்...



பசியினால் பட்டினி கிடந்து
மாண்டுபோன மனிதங்கள்
பிணி பிடித்து
பிரிந்து சென்ற உயிர்கள்
கோரக்குண்டுகள் பாய்ந்து
மடிந்து மண்ணறையடைந்த ஜீவங்கள்
இயற்கையின் பாய்ச்சலினால்
இறந்து போன இதயங்கள்
எல்லாவற்றினதும்
நினைவுகள் மீட்கப்பட்டன
முடிந்துபோன பொழுதுகளில்
அத்தனை துயரங்களும் கலைந்து போய்
அகிலத்தின்
அனைத்து மனித தேடல்களுக்கும்
விடைகளோடு பிறந்திட வேண்டும்...

No comments:

Post a Comment

PAKEE Creation