யாரோ ஒருவர்தான்
குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர்
யாரோ ஒருவர்தான்
கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர்
யாரோ ஒருவர்தான்
கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்
யாரோ ஒருவர்தான்
எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க்
கிடந்தவரும்
பாதி கருகிப் பாதையில் கிடந்தவரும்
யாரோ ஒருவர்தான்
யாரோ ஒருவர்
தெருவில் சிதிலமாய்க் கிடக்கிறாரென
யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள்
சுதாகரித்துக்கொள்...
No comments:
Post a Comment