பல்வேறு வகையான ரணங்கள் தான்
ஆபரணங்களாக வந்து என் வாழ்வில்
பல தடவை மாலை அணிவித்தது
என் விதியை எண்ணி
இந்த உலகத்தையே
மறந்துவிட நினைத்தேன்
தேன்பூச்சி கொட்டிவிட்ட
தோரணையில்
என் இனிய நினைவுகள்
ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன
முன்னேற்றப் பாதையை
நோக்கிப் பல தடவை
நான் எடுத்துக்கொண்ட
அத்தனை உபாயங்களும்
அர்த்தமற்ற உத்திகளாயின...
No comments:
Post a Comment