பார்த்த அளவில் பதறாதே
பயந்து பயந்து சாகாதே
நேர்த்தியாக நெஞ்சை நிமிர்த்து
நினைத்த செயலில் மனதைச் செலுத்து
முடியாது என்று தயங்காதே
முனைய முன்னே மயங்காதே
உன்னை உனக்கே தெரியவில்லை
உன் திறமை உனக்கே புரியவில்லை
காற்றினை அணைத்துப்பார் - அதன்
வேகத்தைக் கணித்துப் பார்
ஆற்றினைச் சற்றுப்பார் - அதன்
தொழில்களை உற்றுப்பார்
நெருப்பினை அணுகிப்பார் - அதன்
சக்தியின் தணலைப்பார்
இவை இயற்கை சக்திகள்
நீயும் இயற்கையின் ஒரு படைப்பு
உனக்குள்ளும் சக்தி ஒன்று
உறங்கிக் கிடக்கிறது
எப்பொழுது நீ அதனை நீ உணர்கிறாயோ
அப்பொழுது அது விழித்துகொள்ளும்
அந்த விழிப்பில்
உன்னை உனக்கே தெரியும்
உன் திறமை உனக்கே புரியும்
அப்பொழுது நீ உன்னை நம்புவாய்
நம்பிக்கை யாவற்றிலும் மேலானது
தன்னம்பிக்கையே
தன்னம்பிக்கை உள்ளவர்க்குத்
தரணியெல்லாம் அடிபணியும்
இல்லை அது என்று சொன்னால்
கல்வி என்ன செல்வம் என்ன
தலையெடுக்க முடியாது...
No comments:
Post a Comment