Sunday, January 22, 2017

அஞ்சிடும் உள்ளம் இருட்டு போன்றது...

வசந்தமில்லா வாழ்வும்
வரவில்லா செலவும்
உயர்வில்லா உணர்வும்
உன் நிலை போன்றது
சிந்தனையில்லா மனமே
சாதிக்க நினைக்காத உனதுள்ளம்
சரமாய்தொடுக்கவஞ்சிய மலர் போன்றது
எண்ணங்கள் இல்லாத உனதுள்ளம்
எற்றிடாத தீபம் போன்றது
அஞ்சிடும் உன் உள்ளம்
அகன்றிடாத இருட்டு போன்றது...

No comments:

Post a Comment

PAKEE Creation