Sunday, January 22, 2017

இறைவனைத் தேடு...

நிலையற்ற இகவாழ்வை நிலையென்று எண்ணி
நிரையாகச் செல்வங்களைச் சேர்க்கின்ற மனிதா
விலையான வாழ்வு விழுந்திடலாம் நாளை
விடமாக மரணம் விரைந்திட்ட வேளை
குலையாத புசிப்பும் குடிப்புமல்ல வாழ்வு
குவலயத்தை படைத்திட்ட பரமனிடம் கேளு

பிறந்தது போன்றே இறந்திடும் தேகம்
பெற்றிட்ட செல்வத்தை பற்றவது இல்லை
உண்ணவும் உடுக்கவும் உன்னிடம் இருந்தால்
உள்ளத்திலே திருப்தியெனும் பொன்னையே நாடு
மண்ணிலே தேகம் மறைந்திட முன்னே
மாயையை நீக்கும் இறைவனைத் தேடு...

No comments:

Post a Comment

PAKEE Creation