தட்டுங்கள் திறக்குமென்றார்
தட்டிய கதவுகள்
தானாய் மூடிக் கொண்டன
ஏன் அவை மூடின?
ஓ...
அவை இதயக் கதவுகளா..?
இல்லை...
அவை இரும்புக் கதவுகள்
அதனால் தான் மூடிக் கொண்டன
அதனால் தான் - நான்
தேடியது கிடைக்கவில்லை
அயலிலே அனல் வீசுகின்றன
உறவுகள் ஊமையாகின்றன
உதிரத்தில் தேட - அவை
உக்கிரமாய் துளைக்கின்றன
அனைத்திலும் தேடி
அமைதி தொலைந்தது...
No comments:
Post a Comment