சரிந்திரம் உண்டா?
ஒத்த முனைகள் காந்தம்
தன்னில் ஓட்டியதுண்டா?
மயிலில் பெண்ணினம்
தொகை விரித்து ஆடியதுண்டா?
பெண் குயில் என்றும் ஆண் குயிலை
கூவி அழைத்ததுண்டா?
இவை இயற்கையின் விதிகள் புரிகிறதா? - ஆணே
பெண்ணை தேடி வருவதும்
அடிமை என்று தன்னை நினைப்பதும்
ஏவல் வேலை புரிந்து நிற்பதும்
"எஜமானி" என்று அவளை நினைப்பதும்
காத்திருத்து தாடி வளர்ப்பதும் - தோற்றால்
மதுவை நாடிச் செல்வதும்
ஆணே!
இயற்கையின் நியதியை மீற முடிந்தால்...
மாற்றிக்கொள்ளுங்கள் - உங்களை
தேடி பெண்களே நாடி வரச் செய்யுங்கள்!
அடிமை என்னும் மடமை எண்ணம்
விட்டுத் தள்ளுங்கள்
தாடியும் மதுவும் வேண்டாம்
என்று சத்தியம் செய்யுங்கள்
புத்தம் புதிய யுகத்தை அமைத்து
நிமிர்ந்து நில்லுங்கள்
மாற்றம் உண்டா - இயற்கை
விதியில் மாற்றம் உண்டா
மாற்ற முடிந்தால் மாற்றுங்கள்
இல்லை
உங்களை நீங்களே தேற்றுங்கள்...
No comments:
Post a Comment