Wednesday, January 18, 2017

என் அழகிய நாடே...


என் அழகிய நாடே
நீ இப்போது
எப்படியிருக்கிறாய்?

அந்நியனின்
ஆயுதங்களுக்கு
அஞ்சியா இருக்கின்றாய்?

நான் நடந்து திரியும்
அந்த மணல் பாதைகளில் இனவெறியர்
இரவு பகலாய் அலைகிறார்களாம்
மெய்யா?

என் இதயத்துள் இளமைப் பாடம்
நடாத்திய
அந்தப் பச்சை வயல் வெளிகளில்
நெருஞ்சியா பூத்திருக்கிறது?

எனக்கு தெரியும்
மனிதன் விரட்டப்படும் போது
மிருகம் சிரிக்குமென்று
எனக்குத் தெரியும்

ஒரே நாளில்
ஓடி வந்தவர்களெல்லாம்
உட்கார்த்திருக்கவில்லை

என் கனவு இதுதான்
மீண்டும்
என் கிராமத்தின் மடியில்
நான் தலை வைத்து
உறங்க வேண்டும்

திசையற்றுத் திரியும்
என் தோழர்களைத்
தொட்டுக்கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

PAKEE Creation