Saturday, March 9, 2013

என் தெய்வம்...



அன்னையே அன்று என் இதயம்
உன் வரவில் சிரித்தது
இன்று உன் சிறுபிரிவால்
அழுகின்றது
ஆயிரம் கண்ணீர்
துளிகளை கண்கள்
பிரசவித்த போது கூட
வலிக்கவில்லை இந்த உயிருக்கு
உன் பிரிவை எதிர்நோக்கும் போது
இதயம் பிளக்கின்றதே என் தெய்வமே
உன் கருவறையில்
என்னை கல்லறையாக்கிவிடு
அன்றிலிருந்து நிம்மதி
எனும் தென்றலை சுவாசிக்கின்றேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation