Friday, March 23, 2012

பொம்பள மனச எவனும் புரியல...

ஊருக்கு தாண்டி நான் கில்லாடி
என் மனச உடைச்சது நீதாண்டி
பொய்யாச்சு எல்லாம் பொய்யாச்சு
என்னை விட்டு எல்லாம் போயாச்சு

கண்ணதாசனும் கம்பன் கவிஞனும்
பொம்பள மனச எவனும் புரியல
கவிஞர் வாலியும் வைரமுத்துவும்
பொம்பள மனச எவனும் அறியல

உன்னை நினைச்சதால நான் மறக்கல
உன்னை மறக்க நினைச்சாலும் முடியல
மனச மனசுக்குள் புதைச்சதல
பிரிக்க முடியல மனசல

உறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும்
அது கிடைக்கவேணும் உன் மடியில
என்னை பார்த்தும் பார்க்காம போகிற
உன்னால முடியுது என்னால முடியல...

No comments:

Post a Comment

PAKEE Creation