Saturday, September 12, 2009
வாழ்வதற்கே வாழ்க்கை...
இந்த உலகம் உனக்கு
சிறையல்ல
நீதான் கைதியாய்
வாழ்கிறாய்
*
நீ
மண்ணுக்காக போராட
தயங்குகிறாய்
ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது
*
வியர்வை சிந்தாத
உன்னாலும் மை சிந்தாத
பேனாவாலும் எதையும்
சாதித்திட முடியாது
*
தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது
தடைதாண்டும் ஒட்டாமே
*
பெருமை என்பது
உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்
*
இந்த
உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்
*
உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்
ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்
*
யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய் அதில்தான்
உள்ளது தனித்தன்மை
*
யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே
*
உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ
ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்
*
வாழ்க்கையில்
மிதக்க கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்
நீந்தக் கற்றுக்கொள் அதுவே
நீ கரைசேர உதவி செய்யும்
*
தோல்விகள் என்பது உன்னை
தூங்க வைக்க பாடும் தாலாட்டு
அல்ல
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்
*
குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்டக்
சிலையாகு
*
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம்
அதில் ஒரு பக்கம்
மட்டும் வாழ்க்கையல்ல
ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை
*
உன் பேனாவைக் கூட
மூடிவைக்காதே அதை
திறக்கும் வினாடிகளில் கூட
நீ எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்
**** PAKEE ****
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment