கனக்கும் ஆசைகள் சுமந்த இதயமும்
கண்டதையும் நினைக்கும் மனமும் தவிர
வேறு என்ன இருக்கிறது எனக்குள்?
கூர்ப்பு விதிப்படி நனொரு விலங்கு
முன்னர் குறித்த முறைப்படி நானெனில் தெய்வம்
மனிதனாய் இருப்பதே எனது விருப்பம்
உள்ளிருந்து வருகிறதாம் ஞானம்
யாரோ சொல்லி வைத்தார்
வெளியிலிருந்து வந்து உள்ளைத் தாக்கி
மீண்டும் புதிதாய் வெளிச்செல்வதே
உண்மை ஞானம் கண்டு தெளிந்தது என் மனம்
உள்ளும் வெளியும் கலந்தியங்கிறது உலகம்
உள்ளிருந்து வெளியும் வெளியிருந்து உள்ளும்
பிரிகையிலே முடிகிறது பயணம்...
No comments:
Post a Comment