அவளுடைய கருங்கூத்தல்
கார்மேகம் போல இருந்தது
ஆனால் அந்தக் கார் மேகத்தினால் அந்தக் கட்டழகு நிலவின் கவர்ச்சியான எழிலை மறைக்க முடியவில்லை அதற்கு பதில் அவளது அழகை அதிகப்படுத்திக் காட்டியது
நீண்டக்கூந்தல்,நீலக்கடல் அலைபோல நெளிந்து நெளிந்து இருக்கிறது
அவளுடைய நெற்றியைப் பிறை நிலவு என்று கூறலாம்
ஆனால் பிறைநிலவையும்,முழுநிலவையும்
ஒரே நேரத்தில் காணமுடியுமா?
அவளுடைய பளிங்கு முகம் பால் நிலவு போல் அல்லவா இருக்கிறது
அந்த வட்ட முகம் வளர்ந்த நிலவுபோல் அல்லவா தோன்றுகிறது
வள்ர்பிறையும் வளர்ந்த நிலவும்
ஒரே வானில் ஒ... ஒ... அதிசயம்
மின்னாட்டம் பூச்சியைப் போல மின்னிக்கொண்டு இருந்த அவள் கண்கள்
நட்சந்திரங்களைப் போல இருந்தன
ஒளியிலே நட்சத்திரம் என்றால்
ஒடி விளையாடுவதில் மீன்
உருவத்திலே மான்
கரும்பு போன்ற புருவங்கள் கரையாக இல்லாவிட்டால்
அந்த மீன்விழிகள்
மான் குட்டிகளைப் போல் துள்ளி ஓடிவிடும்
தேன் உண்ட கருவண்டு விழிகள் பறந்துவிடும்
பாய்வதிலே மீன் என்றாலும்
பார்வையிலே மானின் மிரட்சி
மான் கொம்பு போல நீண்ட மூக்கு
அதை மலர்க்கொத்து என்றாலும்
பொருத்தமாகத்தான் இருக்கும்
கன்னங்கள் காட்டு மலர்களைப் போல
செவ்வரளியின் சிவப்பு போன்றது அந்தக் கன்னங்கள்
நான் இல்லையா? என்று தேன்கனி போன்ற மாங்கனி சண்டைக்கு வரக்கூடும்
மங்கையின் கன்னக் கதுப்புகள் வண்டுபுகாத மம்பழத்துண்டுகள்
ஒ... அவள் உதடுகளோ தேன் கிண்ணத்தின் விளிம்புகள்
அல்லி இதழ்கள்
அமுத ஆறு
அழகிய முத்துச்சிப்பியின் கூறு
பற்களை பச்சரிசி என்பதா
படாத முல்லைச்சரம் என்பதா?
எப்பிடிச் சொன்னாலும் தகும்
அவ்வளவு எழில் படைத்தவை
அவளுடைய சிற்றிடை
வல்லிக்கொடியோ
அல்லிக்கொடி என்றால்தான் என்ன குறை நூலிடை என்றாலும் மாலிடை
தாங்கும் மங்கைக்கு மேலிடை
ஒரு பொருட்டு அல்ல
என்னவளின் நங்கைக்கு வெண்மேக உடைதான் பொருத்தமாக இருக்கும்
ஆனால் அவளோ சாதாரண உடைதான் அணிவாள்
ஆனாலும் அவளது அழகு குறைந்துவிடவில்லை.
காட்டுக் கொடியிலும் மலர்ந்தாலும்
பூ அழகாகத்தானே இருக்கிறது
அதே போல் தான் என்னவளும்
இயற்கையின் தேவதை...
No comments:
Post a Comment