நான் சரியா தேர்வுச் செய்யும்
கலையினை கற்றுத்தா
என்னை எதிர்ப்பவரெல்லாம்
எனது எதிரிகளல்ல
என்பதனை கற்றுத்தா
எனது சிந்தனைகளை
தெரிந்தோ தெரியாமலோ
அறிந்தோ அறியாமலோ
புரிந்தோ புரியாமலோ
ஏற்றுக்கொள்ளாதவரெல்லாம்
எனது எதிரிகளல்ல
என்பதனை கற்றுத்தா
என்னை ஆதரிக்காதவர்கள்
என்னை ஆற்றுப்படுத்தாதவர்கள்
என்னை ஆரவாரிக்காதவர்கள்
என்னை ஆசிர்வாதிக்காதவர்கள்
இவர்கள் அல்ல. மறாக
அடிப்படையில்
எனது எதிரி நானே என்பதனை
அறுதியுடன்
ஆய்ந்தறிந்து தேர்வுக்கொள்ளும்
அனுபவங்களை
அதிகமாகவே தா...
No comments:
Post a Comment