வாழ்க்கையின் போக்கில் வாழ்வை ரசித்து
பின் அலையின் குமிழியாய் நானும் மிதந்து
வானில் துண்டு முகில்போல் அலைந்து
பிரான்ஸ் வீதி ஒரத்து நிழல்களில்
நேரம் மறந்து நடந்து திரிந்து
ஒவ்வொர் பனித்துளிகளிலும் நானும் நனைந்து
பனியின் பாசை அறிந்து
வாழ்வின் மர்மம் கண்டு
உலகின் வஞ்சகம் ஊடறுத்துணர்ந்து
எப்போது உள்மனம் அழுகிறதோ
அப்போது என்மனம் வாழ்வை அறியும்...
No comments:
Post a Comment