பொதுவாக மனித மனம்
கிடைக்காத ஒன்றுக்காகவும்
இழந்துவிட்டவைக்காகவுமே
ஏங்கிக்கொண்டிருக்கிருப்பதும்
அவற்றை நினைத்து சோகத்திலிருப்பதுமே வழக்கம்.
கிடைத்திருப்பதையும் அதன் மதிப்பையும் உயர்வையும்
எண்ணிப் பார்க்கத் தவறியும் விடுகின்றது.
அதே மனம்
எப்போதும் தனக்கு மேலே உள்ள விடயங்களைப்
பார்த்து ஆசை கொண்டு
அதனால் கவலையை தேடிக்கொண்டுதான் இருக்கின்றதே ஒழிய.
தனக்கு கிடைத்ததையும்
தனக்கும் கீழே இருப்பவர்களின்
நிலையையும் எண்ணிப்பார்க்க மறுத்து விடுகின்றது.
இதுதான் மனித மனம்.
இதை வென்றவன் மகாத்மா ஆகின்றான்.
நாம் மகாத்மாக்கள் அல்லவே.
அதனால்தான் ஒவ்வொரு விடயத்திற்கும் சோகித்திருக்கின்றோம்.
அறிவைப் பாவித்து மனதை வளர்ப்போம்...
No comments:
Post a Comment