இந்தப் போலி முகத்திரை
உயிரற்றுச் சுவாசிக்கவும்
உதட்டுச் சிரிப்புடன் வாழவும்
எனக்குப் பிடிக்கவில்லை
பார்த்தும் பாராதிருக்க
நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை
நடக்கச் சக்தியிருந்தும்
நடைபிணமாக
எனக்கொன்றும் நடந்துவிடவில்லை
எனக்கு வேண்டியவை
உரத்த சுவாசங்கள்
காற்றையும் உலுக்கும் வார்த்தைகள்
கனவுகளைச் சுமக்காத கண்கள்
சூரியனைச் எட்டிப்பிடிக்க ஓடும்
என் கால்கள்
என் நம்பிக்கை வானிற்கு இவை போதும்
என் விடுதலை வேட்கைக்கு
வேண்டாம் இந்தப் போலி மூகமுடி
பழைய வேதாந்தத் திரையைக்
கிழித்து வெளிவந்து
நிர்வாணமாக
என்னை நானாகப் பார்க்கப் பிரியப்படுகிறேன்...
No comments:
Post a Comment