Kadhal indri vazhndhal Kovilum Kallaraidhan..Kadhali oruthi uranguvathal oru kallaraium Kovil dhan..!

Wednesday, January 18, 2017

இயற்கையின் நியதி...


வண்டினை நாடி மலர்கள் சென்றதாய்
சரிந்திரம் உண்டா?
ஒத்த முனைகள் காந்தம்
தன்னில் ஓட்டியதுண்டா?

மயிலில் பெண்ணினம்
தொகை விரித்து ஆடியதுண்டா?
பெண் குயில் என்றும் ஆண் குயிலை
கூவி அழைத்ததுண்டா?

இவை இயற்கையின் விதிகள் புரிகிறதா? - ஆணே
பெண்ணை தேடி வருவதும்
அடிமை என்று தன்னை நினைப்பதும்
ஏவல் வேலை புரிந்து நிற்பதும்
"எஜமானி" என்று அவளை நினைப்பதும்
காத்திருத்து தாடி வளர்ப்பதும் - தோற்றால்
மதுவை நாடிச் செல்வதும்

ஆணே!
இயற்கையின் நியதியை மீற முடிந்தால்...

மாற்றிக்கொள்ளுங்கள் - உங்களை
தேடி பெண்களே நாடி வரச் செய்யுங்கள்!
அடிமை என்னும் மடமை எண்ணம்
விட்டுத் தள்ளுங்கள்

தாடியும் மதுவும் வேண்டாம்
என்று சத்தியம் செய்யுங்கள்
புத்தம் புதிய யுகத்தை அமைத்து
நிமிர்ந்து நில்லுங்கள்

மாற்றம் உண்டா - இயற்கை
விதியில் மாற்றம் உண்டா
மாற்ற முடிந்தால் மாற்றுங்கள்
இல்லை
உங்களை நீங்களே தேற்றுங்கள்...

No comments:

Post a Comment

PAKEE Creation