Wednesday, October 21, 2009
உயிரோடு நான் இறந்து விட்டேன்...
கண்ணீரில் வாழ்கின்றேன்
கனவாகி போனவளே உன்னை நினைத்து
மரணத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை.
மதுவில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்,
மது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது.
தூக்கத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
உன்னோடு கைகோர்த்து திரிந்த காலங்கள் கனவில் வந்தது.
தோற்றாலும் விரும்பப்படும் இந்த தெய்வீக காதலை மறப்பதெப்படி...?
சிலுவைகளாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டு,
உயிரோடு நான் இறந்து விட்டேன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment