Wednesday, September 12, 2012

எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீக்கு நன்றிகள்...




எனக்கு விருது (Sunshine blogger award) வழங்கி பெருமைப்படுத்திய ஹிஷாலீ அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...


எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீ இணையதளம்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்கள்...

1. கவியருவி ம. ரமேஷ்
2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா
5. பகீ
6. அருண்
7. அரசன்

பிடிக்கவில்லை...



கடவுளுக்கு தான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர் துளிகளை தருகிறார்

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...

வலிக்கிறது...




நான் அழுத போது
எனக்கு ஆறுதல் சொல்ல நீ
என்னருகிலில்லை

இப்போது நீ அழுகிறாய் தோழியே
உன் கண்ணீரை துடைப்பதற்கு கூட
நான் உன்னருகிலில்லை

சோகம் என்பது நமக்கு
என்றுமே நிரந்தரமில்லை
என்பதை இன்றாவது புரிந்து விடு

நிரந்தரமில்லாத ஒன்றிற்காக
தயவு செய்து கண்ணீர் சிந்தாதே
என் இதயத்திற்கு வலிக்கிறது...

காதல் வலி...



உன் பதில் தெரியாமல்
கொஞ்ச நாள் தவித்தேன்
உன்னை பார்க்கவே
பல நாள் துடித்தேன்
நீ அருகில் இருக்க வேணும் என்று
தினமும் ஆசைப்பட்டேன்

நீ என்னை பிரிந்ததும்
பல ஜென்மம் வேணும்
நான் உன்னை மறப்பதற்கு என
உணர்ந்தேன்...

இதயம்...



என்னிடம் தான் சொல்லவில்லை
நான் இறந்த பின்
என் கல்லறையிலாவது
ஒரு முறை எழுதுவாய
இதில் உறங்குவது
என் இதயம் என்று...

Sunday, September 2, 2012

வலி...




கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினக்குறிப்பிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை

மரணத்திற்கு தெரியும் என் வாழ்க்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...

Tuesday, August 14, 2012

அழகுதீயே...



இது வரை
குளத்தில் மட்டுமே
மீன்களைப் பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உன் முகத்தில் கண்கள்
வலை வீசுவது யார்?
கரையில் இத்தனை காவலர்கள் - இமை
முழு நிலவு முகத்தில்
இடது வலதாய்
இரு மூன்றாம் பிறைகள் - புருவம்
என்ன அதிசயம்
தென்றலைத் தாலாட்டும் கூந்தல்
அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை
பார்த்து விட்டேன் இதழ்களை
வரைந்தது யார்?
ஏய்
அழகுத்தீவே சிரிக்காதே
நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...

Tuesday, August 7, 2012

வாழ்க்கை ஒரு போராட்டம்...



வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை
லட்சக்கணக்கான விந்தணுக்களுடன்
சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம்
போராட்டத்தில் பிறந்து ,
போராட்டத்தில் வளர்ந்து
போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை .
பிறப்பதற்கே லட்சக்கணக்கான
அணுக்களை வென்ற நம்மால்
வாழ்வதற்கான போராட்டத்தில்
வெல்ல முடியாதா என்ன?!!!
வாழ்ந்து தான் பார் நண்பா...

Monday, July 30, 2012

மனிதா...



மனிதா நான் யாரு நீ யாரு
சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு
பண்போடு நல்ல அன்போடு
நீ முன்னேறு நீதான் ஸ்டார்
வாழ்க்கை ஒரு புதிர் போல
எது எப்ப நடக்கும் தெரியாது
கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில்
நல்லது நடக்கும் நம்புங்கள்
முயற்சி இல்லாமல் பலன் ஏது?
குறைகளை சொல்வதினால் தடுமாற்றம்
உனக்குள் ஒருவன் யார் அதை தேடு
அதை நீ அறிந்தால் தான் வரலாறு
போட்டி இல்லாமல் வெற்றி ஏது?
பொறமை கொள்வதால்தான் தகறாரு
நமக்கு தெரியாது பல உண்டு
கற்றது கையளவு
நீ என்னும் தேடு
வா நண்பா மர்மமான வாழ்க்கையில்
வாழ்த்துதான் பார்க்கலாம்...

றோஜாவே...



றோஜாவே...
நீ காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட..!
காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில்
இருக்கலாம்...
PAKEE Creation