காதலினால் காவியங்கள்
எத்தனையோ படைத்து விட்டோம்
ஆனபின்னும் காதலினை
நாம் அறியத் தவறிவிட்டோம் - காதல்
காவியங்கள் அத்தனையும்
கானலைப்போல் விழல் நீராய்
கண்ணில்லா குருடர் முன்னே
ஓவியமாய் ஆயினவோ ! - காதல்
காவியங்கள் அனைத்தையுமே
இலக்கியமாய் ஆக்கிவிட்டோம்
இலக்கியமாய் ஆக்குதற்கா
காவியங்கள் நாம் படைத்தோம்...
எத்தனையோ படைத்து விட்டோம்
ஆனபின்னும் காதலினை
நாம் அறியத் தவறிவிட்டோம் - காதல்
காவியங்கள் அத்தனையும்
கானலைப்போல் விழல் நீராய்
கண்ணில்லா குருடர் முன்னே
ஓவியமாய் ஆயினவோ ! - காதல்
காவியங்கள் அனைத்தையுமே
இலக்கியமாய் ஆக்கிவிட்டோம்
இலக்கியமாய் ஆக்குதற்கா
காவியங்கள் நாம் படைத்தோம்...
No comments:
Post a Comment