skip to main |
skip to sidebar
வாழ்வு எங்களுக்காய்...
நாங்கள் அகதிகள் இருப்பு தொலைந்து
புதிய இருப்புக்காய்
அலைந்து கொண்டிருக்கிறோம்
வாழ்க்கையின் வசந்தங்களை
எண்ணியே
எங்கள் வாழ்க்கைப்பட்டம்
அறுந்து போனது
உல்லாசமாய் வாழ
விசாவொன்றும் வீடொன்றும்
காரொன்றும் வேலையொன்றும்
அழகான பெண்ணொன்றும்
அமைந்தால் போதும்
வாழ்வு எங்களுக்காய்
ஆனதாக எண்ணிக் கொள்கிறோம்...
No comments:
Post a Comment