skip to main |
skip to sidebar
வாழ்க்கை புரியாத புதிர்
விடை தெரியா பயணம்
முன்னுக்கு பின்
முரணான வாழ்கை
பேரும்,புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கிறார்கள்
என்ன வாழ்க்கைடா...
இனிப்பு தேடி
இனி வேறெங்கும்
போவதில்லையாம்
உன் மேனி தொட்டு
இறங்கிய எறும்பு...
நிலம் பார்த்து நீ நடந்தாய்
உன் கால் தடம் பார்த்து
நான் நடந்தேன்
ஆனாலும்
சேருமிடம் தெரியவில்லை
இது தான் காதல் பயணமோ...
கருவி இல்லாமல்
குருவி மரத்தைக்
கொத்திக் குதறுகிறது
மண்வெட்டி இல்லாமல்
மண்ணை குடைகிறது
சித்தெறும்பு
இளைஞனே
இதற்குப் பின்னும்
ஏன் தயக்கம் உனக்குள்?
சாதிக்க எல்லாமே
இருக்கிறது உன்னிடம்
எழுந்து வா...
மானின் துரத்தலில்
மண்டியிட்டது சிங்கம்
அம்மாடி
இதுதான் காதலா...?
அன்னையே அன்று என் இதயம்
உன் வரவில் சிரித்தது
இன்று உன் சிறுபிரிவால்
அழுகின்றது
ஆயிரம் கண்ணீர்
துளிகளை கண்கள்
பிரசவித்த போது கூட
வலிக்கவில்லை இந்த உயிருக்கு
உன் பிரிவை எதிர்நோக்கும் போது
இதயம் பிளக்கின்றதே என் தெய்வமே
உன் கருவறையில்
என்னை கல்லறையாக்கிவிடு
அன்றிலிருந்து நிம்மதி
எனும் தென்றலை சுவாசிக்கின்றேன்...
வழிகளில் கங்கை ஓடம் மனதினில் ஏனோ வாட்டம்
துன்ப மேகம் சூழ்ந்து
இன்ப மழை பொழிய
வடிகின்றான் சிறிது கண்ணீர்
துன்பத்தை தாங்கி தான் இன்பம்
இது இயற்கையின் நியதி...
பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை
கவிஞன் ஆக்கவே
வந்து நுழைந்திருக்கிறது காதல்...
சூரியனின் வரவுக்காக
காத்திருந்தது தாமரை
Oh
விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலோ...
பிரம்மன்
வரைந்த ஓவியம் தான்
பாதியில் முடித்ததோ
ஊனமுற்றோர்...